Tuesday, December 31, 2013

புத்தாண்டு வாழ்த்துப்பா

நல்லெண்ணத்தோடு வரவேர்க்கும் புத்தாண்டு. பழயன கழைந்து புதிய எண்ணங்களோடு காத்திருந்து 2014 புத்தாண்டே உன்னை இப்புவிக்கு வரவேற்க்கின்றோம். ஏழைகள் வாழ்வு மலர்ந்திட, துன்புற்றவர்களுடைய வாழ்வு இன்புற்றிட புத்தாண்டே நீ இப்புவிக்கு வருதல் வேண்டும். வளமையற்ற பூமியில் வளமை செழித்திட, மழைக்காக காத்திருக்கும் விவசாயி, விடியலை நோக்கி காத்திருக்கும் நல் மக்கள் போன்றவர்களுக்கு இப்புத்தாண்டே நீ நல்லாண்டாய் மலரவேண்டும். சமதர்மம் வளரவும், அநீதிகள் மரைந்து நீதி செழிக்கவும் புத்தாண்டே நீ உதவ வேண்டும். எல்லோரும் ஒன்று என்ற ஒற்றுமை உணர்வு மக்களிடம் மலர இப்புத்தாண்டு நமக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கயில் இந்த புத்தாண்டை வரவேர்ப்போம். அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

1 comment:

  1. அருமையான வாழ்த்து.

    ReplyDelete