Thursday, October 31, 2013

கட்டுக்கதைகள்

சின்ன வயசு, ெல்லோரும் கதை கேட்டு தான் வளர்ந்திருப்போம். ஆனால், எல்லாநேரங்களிலும் நமக்கு சொல்லப்படுகின்ற கதைகள் அனைத்துமே கட்டுக்கதையாகவே இருக்கும் அதையும் நாம் நம்பி விடுவோம். சிலர் சொல்லும் கட்டுக்கதைகளை கேட்டால் நமக்கே அவை நேரில் நிகழ்வது போன்றே இருக்கும். அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களும் மிகவும் வித்தியாசமாகவே இருக்கும். அவற்றில் நாம் பட்டியலிட்டு சொல்லவேண்டுமென்றால் அசையும் மரங்கள், பேசும் விலங்குகள், பேசும் பறவைகள், பறக்கும் மீன்கள் என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அதேப்போன்று கதை சொல்லும் விதங்களும் பார்த்தால் இவர்களே நேரில் சென்று பார்த்துவிட்டு சொல்வது போன்றே ஒரு திரில் இருக்கும். கதையில் வரும் நாயகனை அவர்கள் சொல்லும்பொழுது அவனொரு மாய வித்தைக்காரனைப்போலும், அல்லது அவனை ஒருபடி உயர்த்தி கூறுவது என்று பலக்கோணங்கலிலே கதைகளை நமக்கு சொல்வார்கள். குறிப்பாக பாட்டி தாத்தா சொல்லும் கதைகளை நாம் கேட்டோம் என்றால் அது என்னவோ தெரியாது, மனதை எங்கோ கொண்டு சென்று விடும். கட்டுக்கதைகள் சொல்வதென்றால் பள்ளியில் பயின்ற சில கதைகள் எனது மனதில் இன்றும் நினைக்கத்தூண்டுகின்றன. கதைகளில் வரும் கதாநாயகிகள் என்று பார்த்தால் அவர்களைப்பற்றி கூறுவது தான் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அவர்களை ஒரு தேவதைப்போன்றும், வேற்று கிரகத்தின் பெண் என்று பல கோணங்களில் விவரித்து கூருவார்கள். அது மட்டுமா, கதையில் வரும் திருடன், போலீஸ், போன்றவர்களுடைய கதாப்பாத்திரங்களை பார்த்தால் அது மிகவும் திரிலாகவே இறுக்கும். அவர்கள் ஏதாவது பறவைகளோடு பேசுவது போன்றும், அல்லது ஏதாவது ஒரு இடத்தில் சென்று அங்கு மற்ற விலங்குகள் உதபுவது போன்றும் இத்தகைய கதாப்பாத்திரங்களை கதைகளில் சித்தரிப்பார்கள். இத்தகைய கதைகள் சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் சொல்லிக்கொடுக்க படுகின்றன. நாம் இவற்றை சிந்தித்து பார்த்தோமென்றால் நமக்கே சிறிப்பாக தான் இருக்கும். எனக்கும் இப்படித்தான் ஒரு ஆசிரியர் பல கட்டுக்கதைகளை எங்களுக்கும் கூறுவார். அவருடைய வகுப்பு வந்து விட்டால் போதும், பல மாணவர்களுக்கு கொண்டாட்டம். காரணம், ஏதாவது ஒரு கட்டுக்கதையை அடுக்கடுக்காக கூறிக்கொண்டே இருப்பார். இவருடைய கதைகளில் வரும் பொருட்கள் மற்றவைகளைவிட மிகவும் திரில் மிக்கதாகவே இருக்கும். மந்திரச்சாவி, பேரைச்சொன்னால் சென்று அடிக்கும் கொம்பு, கட்டளை இட்டதை செய்து முடிக்கும் சட்டை, நினைத்ததை கொண்டு வந்து கொடுக்கும் பறக்கும் தட்டு என்று அவர் கூறும் கதைகளின் அம்சம்் அவ்வளவு திரிலாகவும், இருதியில் ஏதாவது ஒரு கருத்தை சொல்வதாகவும் ிருக்கும். எனவே கட்டுக்கதைகளுக்கு அனைவருமே அடிமைகளாக நம்முடைய சிறு பருவம் இருந்திருக்கும். குறிப்பாக அந்த காலத்தில் நம்முடைய தாத்தா பாட்டி போன்ற முன்னோர்கள் நமக்கு சொல்லும் கதைகள் இன்றும் நம்மை அந்தகால நினைவுகளுக்கு அழைத்து சென்றிருக்கும். இந்த காலத்தில் இத்தகைய கட்டுக்கதைகளை கேட்பதென்பது மிகவும் அரிதாகி விட்டது. எனவே இத்தகைய கதைகளை நாம் இன்று திறைப்படங்களிலும், ஏதேனும் ஒரு தொலைக்காட்சி நாடகத்திலோ தான் நாம் காண முடிகின்றது. இத்தகைய கதைகளை கேட்பதால் நமக்கு உண்டாகும் ஒரு பயன் என்ன தெரியுமா? நம்முடைய கதை படைப்பாற்றல் அதிகமாகும். சிந்தனைகளை ஆழப்படுத்தி பல புதிய கற்ப்பனைகளை உருவாக்க முடியும் என்பதே நான் என்னுடைய அனுபவத்தில் கண்ட உண்மை. கற்றுத்தரும் அனுபவங்களை நாம் பாடமாக எடுத்து மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லுவோம்.

Wednesday, October 30, 2013

நடிகவேல் m.r. ராதா சிறப்பு பார்வை

ஏரி இரங்கும் எஹத்தாளக்குறல், கேளிக்கிண்டலில் கிழித்து தொங்கவிடும் சமூக அவலங்கள் என தனக்கஎன்றே திறை உலகில் ஒரு தனி முத்திரை பதித்தவர் தான் m.r. ராதா. இவர் பிறந்தது சென்னையிலுள்ள சிந்தாதரிப்பேட்டை. தந்நுடைய எட்டு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி விட்டாராம் திரு ராதா அவர்கள். அதன் பிறகு டப்பி அறங்க சாமி நாய்டு அவர்கள் ராதாவிர்க்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பழித்தார். முதல் முதலில் அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசனாக வந்து அம்மாப்பசிக்கிது, அம்மா பசிக்கிது என்ற வசனம் தான் ராதா அவர்கள் நடித்த முதல் நடிப்பாகும். அதன் பிறகு தான் ராஜசேகர் என்ற திறைப்படத்தில் அவர் நடித்தார். இது அவருடைய முதல் திறைப்படமாகும். அந்த படத்தின் டைட்டிலில் தான் அவர் m.r. ராதா என்று அறிமுகமானார். இவை எல்லாம் பின் நாட்களில் சுயமரியாதை கலைஞராக சுடர் விட்ட ராதாவின் தொடக்க வாசல்கள். ராதாவின் நாடகக்கோட்டயிலே சிலர் ஒரு பத்திரிக்கையை மரைத்து வைத்து படிப்பது வழக்கம். ஒரு நாள் ராதா பொன்னையா என்கிற நடிகரிடம் அது என்னையா பத்திரிக்கை என்று கேட்டாராம். அதர்க்கு அவர், இது தந்தை பெரியார் அவர்கள் நடத்தும் குடியரசு என்ற பத்திரிக்கை என்று ராதாவிடம் கூறினாராம். வாங்கி படித்த ராதாவுக்கு எப்படியாவது தந்தை பெரியாரை பார்த்து விடவேண்டும் என்கின்ற ஆசை. பொன்னையா என்பவர் தான் முதல் முதலில் ராதா அவர்களை பெரியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். இது திரு m.r. ராதாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பமாகும். இந்த சந்திப்பு தான் பின் நாளில் இவரை ஒரு சிந்தனையாளராக மாற்றியது. அதன் பிறகு திராவிடக்களகத்தால் நடத்தப்படும் அனைத்து கூட்டங்களிலும் ராதா அவர்களுடைய நாடகம் இருக்கும். ஒருமுறை அண்ணா அவர்கள் ஒருப்பொது கூட்டத்தில்எ பேசியப்போது நாங்கள் நூரு மாநாடுகள் நடத்துவதும் சரி, ராதாவின் ஒரு நாடகத்தை ஒருமுறை பார்ப்பதும் சரி என்று பேசினாராம். பிர்க்காலத்தில் பெரியாரும் இதனை வழிமொழிந்தார். பெரியாரின் மாநாடுகளிலே திரு m.r. ராதா தான் குதிரயில் ஏரி கொடிப்பிடித்து முதலில் செல்வாரம். ஆனால், கடைசிவரை ராதா அவர்களுடைய இயக்கத்தில் சேரவில்லை. 1954 ாம் ஆண்டு அரசு கம்மியூனிஸ்டுகளை வேட்டையாடி கொண்டிருந்த காலம். அப்போது புகழிடம் கேட்டு ராதாவிடம் அழைத்து வரப்பட்டார் கம்மியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு ஜீபா அவர்கள். ராதா அவருடைய தோற்றத்தை மாற்றி நாடகக்குழுவில் உள்ள ஒரு பெண்ணின் தந்தை என்று கூறி அவருக்கும் அவ்வப்போது சில கதா பாத்திரங்களை கொடுத்து நடிக்கச்செய்தாராம். ஆனால் ஜீபாவிர்க்கோ நடிப்பே வரவில்லை. இவ்வாரு திரு m.r. ராதா அவர்கள் தனது வாழ்க்கையில் ஒரு நீங்காத முத்திரையை பதித்தவர். ராதாவிர்க்கு நடிகவேல் என்ற பட்டத்தை வழங்கியவர் திராவிடக்களகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள் ஆவார்.

Monday, October 28, 2013

மனதில் தோன்றிய நினைவலைகள்

மனிதனுக்கு கடவுள் கொடுத்த அருமையான ஒரு அதிசயம் என்ன தெரியுமா? முன்பு அவன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அவன் மீண்டும் தன்னுடைய மனதில் அசைபோட்டு பார்க்கும் ஒரு கொடை தான். அந்த நினைவுகளில் சில பேர் நம் வாழ்வில் வந்து மரக்க முடியாத ஒரு தனி முத்திரைகளை பதித்தவர்களென்று சொன்னால் அது நமக்கு மீண்டும் மீண்டும் அவர்களை நினைக்கத்தூண்டிக்கொண்டே இருக்கும். ஆனால் பல வரிடங்களுக்கு பிறகு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அவர்களிடம் பேசினோம் என்றால் அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி ஒரு தனி சந்தோஷம் தான். அந்த மகிழ்ச்சியை வெளியே சொல்லமுடியாது, சில நேரங்களில் அவர்களுடைய குறல் கேட்டால் நமக்கு ஒரு நிமிடம் என்ன பேசுவதென்பது நமக்கே தெரியாது. இவை எல்லாம் நம்முடைய மகிழ்ச்சியின் உண்மையான ஒரு வெளிப்பாடு தான். ஆனால் அதிலும் நாம் அவர்களை சிலவேளைகளில் அடயாளம் கண்டுகொள்ள முடியாது. ஆனால், அவர்கள் நம்மை அடயாளம் கண்டு நம்மோடு வந்து பேசினால் அப்போது இருக்கின்ற மகிழ்ச்சி எப்படி பட்டது தெரியுமா? இந்த உலகில் உள்ள பொருட்களை விட விலைமதிப்பற்றதாகும். இதனை ஒரு விதமான அன்பு என்றும் கூறலாம். சென்ற வாரம் ஒரு நாள் கொட்டும் மழை அலுவலகத்திர்க்கு போக முடியவில்லை. வீட்டிலே இருந்து வேலை செய்யுங்க சார் என்று ஒலித்த தொலைப்பேசி, ஆம் என்று சொல்லாமல் சொன்ன என்னுடைய மனசு. இந்த நேரத்தில் தான் என்னுடைய தொலைப்பேசியில் வந்த ஒரு அழைப்பு என்னை மிகவும் மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து சென்றது. பிஜோன் உனக்கு மேபுல் டீச்சர் நம்பர் வேணுமாடா? என்று கேட்ட எனது னண்பனுடைய குறல் தான் அது. பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை என்னை ஊக்கமளித்து எனக்கு பலவிதங்களில் உதவிய ஆசிரியை தான் அந்த மேபுல் டீச்சர். நீண்ட நாளாக தேடிய அந்த டீச்சருடைய நம்பர் கெடச்சதும் என் மனதில் ஒரு இணம் புறியாத ஒரு மகிழ்ச்சி. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த ஆசிரியரிடம் நான் பேசினேன். அப்போது அந்த ஆசிரியை கொஞ்சம் கொஞ்சமாக என்னை நினைவு கூர்ந்தார். ஆனால் எனக்கோ மனதில் அந்த ஆசிரியை எனக்கு செய்த பல உதவிகள், அந்த ஆசிரியரிடம் சேட்டை செய்து மாட்டிய நாட்கள், கணக்கென்றாலே எனக்கு அலர்ஜி அந்த கணிதப்பாடத்தை என் மனதில் புறியவைக்க அந்த ஆசிரியை எடுத்த முயர்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளில் டீச்சர் இருக்குரேண்ட நீ கலந்துக்கொள் என்று அந்த ஆசிரியை எனக்கழித்த ஆர்வம், இந்த ஆசிரியரின் முயர்ச்சியால் குழந்தை செல்வங்கள் என்ற கவிதயை மேடயிலே பேசி பரிசு பெற்ற நாட்கள். இவை அனைத்தும் அந்த ஆசிரியரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும்போது என் மனதை பள்ளி வாழ்க்கைக்கு மீண்டும் அழைத்து சென்றது. அது மட்டுமா, இன்றும் அந்த ஆசிரியை என்னிடம் தொலைப்பேசியிலே அன்று பேசிய அதே கனிவான வார்த்தைகளால் பேசியது தான் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தின. எனவே இப்படி பட்ட ஒரு ஆசிரியை எனக்கு கிடைத்தது மாபெரும் பாக்கியமாக நான் கருதுகின்றேன். நான் வேலை செய்கின்றேன் என்று சொன்னதும் அந்த ஆசிரியை மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். எனவே வாழ்வில் என்றும் மரக்க முடியாத நவர்களை நாம் சந்தித்து அவர்களோடு நல்லுரவு வைத்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய கருத்து. வாழ்வில் நாம் முந்நேற பாடுபட்ட நவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை நாம் நம்முடைய மனதில் என்றும் நினைவு கூறவேண்டும். நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மரக்கத்தெரியாதா என்று பாடிய அன்த கவிஞன் ஒரு உண்மையைச்சொன்ன கவிஞராவார். நினைக்கத்தெரிந்த மனமானது வாழ்விலே நடந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைக்க வேண்டும். வாழ்விலே நடந்த தீய நிகழ்வுகளை மரந்து நட்புரவோடு வாழும் மனமே நல்ல மனதாகும்.

Sunday, October 27, 2013

அதிர வைத்த தொடர்கொலைகள்

முதலாம் உலக போரின் பிற்பகுதியில் தொடங்கி ிரண்டாம் ுலக போர் முடிந்ததற்கு பின்னும் ரஷ்ய நாட்டை உலுக்கிய தொடர் கொலைகள் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு. முதலாம் உலக போரின் பிற்பகுதியில் ரஷ்ய நாட்டில் தொடர்ந்து படுகொலைகள் நடை பெற்று வந்தன. ஆனால், இந்தகொலைகளை ஒரே நவர் தான் செய்து வருகின்றான் என்பதை ரஷ்ய நாட்டு போலீசாரால் யூகிக்க முடிந்தது. காரணம், இந்த படுகொலைகள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நடைப்பெற்றுவந்தன. ஆனால் கொலையாழியை கண்டுபிடிப்பதில் அந்நாட்டு போலீசார் தொடர்ந்து திணரினார்கள். இரண்டாம் உலக போர் ஒரு ப்பக்கம் இருக்க மற்றொருபுறம் படுகொலைகளும் தொடர்ந்தன. அந்த நேரத்தில் தான் ஆண்டிரோச்சிக்காக்கோ என்ற நவரை சந்தேகத்தின் அடிப்படையில் ரஷ்ய நாட்டு போலீசார் அவனை கைது செய்தனர். அவன் கையில் ிருந்த ஒருத்துணி பையில் ிரத்தக்கறை படிந்த ஒரு கத்தியையும் போலீசார் கைப்பற்றி அவனிடம் விசாரணை நடத்தினர். தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால் அவன் தப்பித்து விட்டான். சற்று நாட்கள் குறைந்திருந்த படுகொலைகள் மீண்டும் அறங்கேரத்தொடங்கின. சில நாட்களுக்கு பின் மற்றொருவனை போலீசார் தொடர்ந்து கைது செய்தார்கள். ஆனால் போலீசாரின் ஸித்திரவாதைகளுக்கு அவன் பயந்தான். எனவே தான் அவன் தான் இந்த கொலைகளைச்செய்ததாக ஒப்புக்கொண்டான். எனவே அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற பட்டது. ஆயினும் படுகொலைகள் நின்றப்பாடில்லை. மீண்டும் மற்றொருவனை சந்தேகத்தின் அடிப்படையில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். ஆனால், போலீசாருக்கு பயந்த அவன் தானாகவே தற்கொலை செய்துகொண்டான். சில மாதங்களுக்கு பின் ஆண்டிரோச்சிக்காக்கோவை கன்னத்தில் சில ிரத்தக்கறைகளுடன் ரஷ்ய நாட்டு போலீசார் அவனை மீண்டும் கைது செய்தனர். ிரண்டாவது முறையாக போலீசாரிடம் சிக்கிய ஆண்டிரோச்சிக்காக்கோ இம்முறையும் தன்னுடைய பேச்சால் தப்பிக்க முயன்றும் அவனால் முடியவில்லை. காரணம், அவனது கன்னத்திலிருந்த ிரத்த துளிகள். மன நல மருத்துவர்களிடம் ாலோசனைக்காக அனுப்பப்பட்ட சிக்காக்கோ தான் செய்த கொலைகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டான். சுமார் 55 தொடர் கொலைகளை செய்ததாகவும் அவன் அந்த மருத்துவர்களிடம் ஒப்புக்கொண்டான். அவன் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதயும் மருத்துவர்கள் ுருதி செய்தனர். ஆண்டிரோச்சிக்காக்கோ ஒரு பள்லியில் முதலில் ஆசிரியராகப்பணியாற்றிவந்தான். அவன் முதன் முதலில் நிகழ்திய கொலை எது தெரியுமா? சுமார் 13 வயது நிறம்பிய ஒரு பள்ளி மாணவி ஆவாள். தனது காதளியால் பெரிதும் அவமானமடைந்த சிக்காக்கோ மன ுழைச்சலுக்கு ஆழானான். பிறகு தனது பள்ளியிலுள்ள மாணவர்களாலும் கேழி செய்யப்பட்டான். ஆத்திரமடைந்த அவன் தொடர் கொலைகளை நிகழ்த்தி வந்தான். இருதியில் அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவன் தூக்கிலிடுவதற்க்கு முன் அவன் கொலைகாரனாக மாருவதர்க்கு அவன் கூறிய காரணம் என்ன தெரியுமா? எனக்கு அப்பா கிடயாது. அம்மா தான் எங்களை வளர்த்து வந்தாள். என்னுடைய அம்மா எங்களிடத்தில் அன்பாக எந்த விஷயத்தையும் சொன்னதில்லை. எதர்க்கு வேண்்டுமென்றாலும் அடிப்பது, திட்டுவது என்று தான் எங்களை வளர்த்து வந்தாள். ஒரு முறை நானும் என்னுடைய சகோதரனும் காட்டில் விறகு வெட்டுவதர்க்காக சென்றிருந்தோம். ஆனால், திடீரென்று வந்த ஒரு கும்பல் என்னுடைய சகோதரனை உயிரோடு என் கண் முன்னால் எரித்து கொன்றது. அப்போது என்னால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே என்னுடைய மனதில் மிகுந்த வருத்தமும் ஒருவிதமான கோபமும் எழுந்தது. அது மட்டுமல்லாமல், நான் ஆசிரியராக பணிப்புறிந்த பள்ளியில் என் மாணவர்களும் என்னை மதிக்காமல் வெருப்பேற்றினார்கள். அதர்க்கு காரணம், என்னுடைய காதலி தான். அவள் அங்கு உள்ள மாணவர்களிடமும் ஆசிரியரிடமும் நான் ஆண்மை இல்லாதவன் என்று சொல்லி விட்டதால் அனைவரும் என்னை மதிக்காமல் வெருப்பேற்றினார்கள். என்று அவன் தான் கொலை காரனாக மாருவதர்க்கு காரணமான சூழலை விவரித்தான். அதன் பிறகு தான் அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வினை பார்க்கும் நேரத்தில் நாம் அவனுடைய குடும்ப சூழல் காரணமா? அல்லது, சமூக சூழல் காரணமா என்பது நம்முடைய மனதில் கேழ்வியாக எழும். ஆனால் என்னுடைய கருத்து அவனுடைய தாய் அவனிடத்தில் சிறு வயதிலேயே அன்பாக நடந்திருந்தாள் என்றால் இத்தகய ஒரு நிலைக்கு அவன் ஆளாகி இருக்கமாட்டான். அன்பு என்பது என்னவென்றே தெரியாமல் அவன் வளர்ந்ததால் தான் அவனால் எந்த ஒரு சூழலையும் சமுதாயத்தில் அவன் சாதாரணமாக எடுத்து கொள்ள அவனால் முடியவில்லை. என்பது என்னுடைய கருத்து.

மனிதனால் கண்டறியாத சில விடைகள்

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வரும் நாம் இன்றளவும் பல வினாக்களுக்கு விடை தெரியாமல் தவித்து கொண்டு வருகின்றோம். ஆனால் சில வினாக்களுக்கு ஆண்மீகம் மூலமாக பதில் கூற முயர்ச்சிக்கும் நம்மால் சரியாக விடைகளை கூற முடியவில்லை. என்பது தான் உண்மை. நோய்களை குணமாக்கவும் தடுக்கவும் பல மருந்துகளை கண்டு பிடிக்கும் ஒருவரால் அந்த நோய்க்கான தீர்வினை சரியாகச்சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை. இதற்கு ஏனென்ற கேழ்விக்கு எவராலும் சரியாக பதிலை சொல்ல முடியாது. ஏன், என்னாலும் கூட சொல்ல முடியாது. ஆனால், ஒரு நிமிடம் நாம் சிந்தித்து பார்த்தோமென்றால் இதற்கு காரணம் படிப்படியாக நாம் நம்முடைய இயர்க்கை கொடுத்த கொடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அவற்றை செயர்க்கையாக உருவாக்க நினைப்பது தான். விஞியானம் வளர்ந்தாலும் மனிதனுடைய பழக்கவழக்கங்களும் கலாச்சாரமும் அதனோடு பின்னி பிணைந்ததாக இல்லை. கலாச்சாரத்தில் சிலர் புதுமைகளை விரும்புவதும் சிலர் பழமையை விரும்புவதும் அவரவர் மனதை பொருத்தது தான். என்னுடைய கேழ்வி என்னவென்றால், ஏன் நம்முடைய மனது அடுத்தவர்களுடைய மனதோடு இணைந்ததாக இல்லை? அறிவியல் வளர்ந்ததென்றால் நம்முடைய பிரச்சனைகளுக்கு ஏன் இந்த அறிவியலால் தீர்வு கிடைக்கவில்லை? பண்டய காலத்திலிருந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை இன்றும் இருந்திருந்தால் இன்று ஏற்படும் பல பிரச்சனைகளை குடும்பத்திலுள்ள பெரியவர்களால் ஓரழவிற்க்கு தீர்த்து வைத்திருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. ஆண்மீகத்திலும் சரி ஒரு மனிதனால் சரியான பதிலை சொல்ல முடியவில்லையே? ஏன்? வாழ்க்கயில் ஏற்ப்படும் பிரச்சனைகளுக்கு பல சிறந்த ஆண்மீகவாதிகளையும் பல ஜோதிடக்கலைஞர்களையும் சந்தித்து கோவிலில் சென்று பல பரிகாரங்களை செய்யும் மனிதனால் அந்த பிரச்சனைக்கு ஏன் தீர்வு காண முடியவில்லை? இறந்த பிறகு ஒருவருடைய ஆன்மா மோட்சம் செல்கின்றது என்று அனைத்து மதத்தைச்சார்ந்த ஆண்மீகவாதிகளும் பல மக்களும் நம்புகின்றார்கள். ஆனால் இன்றழவும் அது உண்மையா என்று எவராலும் கண்டரிய முடியவில்லை. இறந்த பிறகு ஒருவருடைய நிலை என்ன? இதையும் எந்த விஞ்ஞியானமும் எடுத்துச்சொல்ல முடியவில்லை. ஏநென்றால் இவயெல்லாம் மனித சக்திக்கு அப்பால் பட்ட நிலைகள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை காலகாலமாக இது பற்றிய விஞ்ஞியான ஆராய்ச்சிகளும், ஆண்மீக ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டே இறுக்கும் என்பது தான். விஞ்ஞியானம் சொல்கின்றது ரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று. ஆனால் அதே விஞ்ஞியானத்தால் எவ்வாரு ரத்தம் பாலாக மாறுகிறது என்பதை ஏன் கூற முடியவில்லை? இது தான் ஒரு வினாவிர்க்கு ஒரு பக்கத்தில் விடைகளைக்கண்டரிந்து மற்றொரு புறம் அதற்கான விளக்கத்தை கண்டு பிடிக்க முடியாமல் தவிப்பது. அதே போன்று மனிதர்களுடைய ியக்கங்கள் ஒவ்வொன்றும் முதலில் மூளைக்கு சென்று அதற்கு பிறகு தான் மற்றப்பகுதிகளில் செல்கின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒரு நொடியில் நிகழும் செயல்கள். என்னுடைய கேழ்வி என்னவென்றால், இவை எவ்வாரு நிகழ்கின்றன? இதர்க்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இறுக்கின்றன ஆநால் எந்த விஞ்ஞியானத்தாலும் விடைகளைச்சொல்ல முடியவில்லை. இதர்க்கெல்லாம் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் வினாக்களுக்கு விடைகளை கண்டுபிடிப்பதென்பது மிகவும் கடினம். ஆனால் இயர்க்கயை மரந்து என்றைக்கு மனிதன் செயற்கைக்கு மாரினானோ அன்று முதல் அவன் அவனுடைய வாழ்க்கயின் ஆயுளை பாதியாக குறைத்து விட்டான் என்பது தான் உண்மை. உரவுகளை மறந்த மனிதன் உறவுகளை காக்க வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் மனம் சோர்ந்து விடாமல் போராடுபவன் தான் உண்மயான மனிதன்.

Wednesday, October 23, 2013

பயணங்கள்

பயணம் என்பது அனைவருடய வாழ்விலும் முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது. பலவிதமான பயணங்களை நாம் மேற்கொண்டிருப்போம், ஆனால் ஏதாவது ஒரு பயணம் நம்முடைய வாழ்வில் மரக்க முடியாத ஒரு பயணமாக மாரி இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. எனக்கு நீண்ட தூரம் செல்வதென்பது மிகவும் பிடித்த ஒன்றாகும். ரயில் பயணம் என்றால் அது எனக்கு மிகவும் ஆநந்தம். என்னால் மரக்க முடியாத ஒரு பயணம் என்றால் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது நாங்கள் செல்லும் சுற்றுள்ளாவாகும். குறிப்பாக நான் ஆராம் வகுப்பு படிக்கும்போது ஹைத்ராபாத்திலே மேற்கொண்ட ஒரு சுற்றுள்ளாவாகும். அப்போது நாங்கள் இந்திய அணியின் முந்நால் கிரிக்கெட் வீரர் மொஹமது அசாருதீன் பயின்ற பள்ளியில் தான் நாங்கள் மத்திய உணவு மேற்கொண்டோம். அங்கே ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ஒரு வயதான மூதாட்டி பள்ளியை சுத்தம் செய்பவர் ஆங்கிலம் பேசியது தான். இதே போன்று நாங்கள் சென்ற பல சுற்றுள்ளா அனுபவங்கள் என்னுடைய மனதிலே இன்றழவும் நிலைத்திருக்கின்றன. என்னுடைய இருதி பள்ளி சுற்றுள்ளா என்பது கொயம்பத்தூர் மற்றும் ஊட்டியிலே நாங்கள் மேற்கொண்ட சுற்றுள்ளா தான். அந்த நேரத்திலே 12 ஆம் வகுப்பு பயின்ற என்னுடைய சக நண்பர்களோடு எடுத்த புகைப்படங்கள், பேருந்திலே நாங்கள் அடித்த அரட்டைகள், தங்கும் இடத்திலே எங்களுக்குள்ளே எழுந்த சிறு சிறு சண்டைகள் ஆகியவற்றை நினைத்தால் இன்றும் என் பள்ளி அனுபவங்கள் மனதிலே அசைவாடிக்கொண்டிருக்கும். ஒருமுறை பேருந்து பயணத்தின்போது நடந்த ஒரு உண்மை நிகழ்வை இங்கே பஹிர்கின்றேன். பேருந்து நிலயத்திலிருந்து புறப்பட தயாரான நேரம் அது. அவசர அவசரமாாக வந்து பேருந்தில் ஏரி அமர்ந்த ஒரு பெண்மணி தான் போக வேண்டிய இடத்திற்கான பயணச்சீட்டை நடத்துனரிடமிருந்து பெற்றுக்கொண்டாள். அதன் பிறகு பேருந்து புறப்பட்டது. இருக்கயில் அமர்ந்த படியே தான் சாப்பிடுவதற்காக தந்நிடமிருந்த இட்டலிப்பாத்திரத்தை திறந்தாள். அப்போது திடீரென இட்டிலி பாத்திரமானது கீழே விழுந்தது. அருகிலிருந்த அனைவரும் அந்த பெண்மணியை திட்டினார்கள். அந்த கூட்டத்திலே இருந்த ஒரு சிருவன் அப்பெண்மணியிடம் ஆண்டி நீங்க பசிக்கிதுணு தானே சாப்பிடத்தொடங்கினீங்க? அது தெரியாமல் தானே கீழே விளுந்திடுச்சி? என்கிட்ட இட்டிலியும் சிறிதளவு மிழகாய் பொடியும் இருக்கு அதை நான் தரட்டா? என்று அந்த சிருவன் அந்த பெண்மணியிடம் கேட்டதும் அனைவரும் ஒரு நிமிடம் அந்த சிறுவனை பார்த்து ஆச்சரியமடைந்தார்கள். இதிலே ஒரு முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் எவருக்குமே தோன்றாத ஒரு சிந்தனை அந்த நேரத்தில் அந்த சிருவனுக்கு தோன்றியதென்பது தான்.

Tuesday, October 22, 2013

பார்வயற்றவர்களுக்கு உதவும் நாய்கள் பற்றி ஒரு சிறப்பு பார்வை

வீட்டிலே நாம் செல்ல பிராணிகளாக சில விலங்குகளை வளர்ப்பது உண்டு. அவற்றில் ஒன்று நாய். ஆனால் இந்த நாய்கள் மனிதர்களுக்கு அதுவும் பார்வயற்றவர்களுக்கு அவர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச்செல்வதற்கும், அவர்களை பத்திரமாக சாலைகளை கடப்பதற்கும் மேலை நாடுகளில் பெருமளவில் பயன்படுத்த படுகின்றன. இந்த வகை நாய்கள் எவ்வாரு நம்மை போன்ற பார்வயற்றவர்களுக்கு உதவுகின்றன என்பதை இஸ்ரேல் நாட்டில் இத்தகய நாய்களை பயன்படுத்தும் ஒரீலியா என்ற ஒரு பார்வயற்ற பெண்மணியிடம் ஸ்கைப் மூலமாக நான் நடத்திய ஒரு சிறு உறையாடலை உங்களோடு பஹிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். முதலில் அவர் கூறியதாவது: கைட் டாக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நாய்களை வாங்குவது என்பது அவ்வழவு சுலவமல்ல. இஸ்ரேல் நாட்டில் ஒரு நாயை வாங்குவதற்கு சுமார் இருவதாய்ரம் டாலர்களாகும். அதன் பிறகு அதற்கு பயிர்ச்சி அழிப்பது ஆகும் செலவுகள் பராமரித்தல் போன்ற செலவுகள் என்பது மிகவும் அதிகம். ஆனால், இஸ்ரேல் நாட்டில் இதற்கான சலவீனங்களை அரசே ஏற்று கொள்கின்றது. எனவே எங்களால் இத்தகைய நாய்களை எளிதில் வாங்க முடிகின்றது. என்று கூறினார். இதைப்பற்றி மேலும் விவரமாக கூறுங்களே? அதற்கு அவர்: இந்த நாய்களை பயன்படுத்துவதென்பது சற்றே கடினமானது. இதற்கு நடைபாதைகள் சீராகவும், தங்கு தடை இல்லாமலும் இருக்க வேண்டும். மேடு பள்ளமான பகுதிகளில் இத்தகைய நாய்களோடு நாம் நடந்து செல்வது கடினமாக இருக்கும். குறிப்பாக, மொரீஷியஸ், இந்தியா, பாக்கீஸ்த்தான் போன்ற நாடுகளில் இவற்றை பயன்படுத்துவதென்பது மிகவும் கடினம். காரணம் நடைபாதைகளும் சரியாக இல்லாத பாதைகளும் தான். இவற்றிர்க்கென்றே தனி பயிர்ச்சி மய்யங்கள் எங்கள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளை கடக்க எவ்வாரு இந்த நாய்கள் உதவுகின்றன? இத்தகைய நாய்கள் தானாக சாலைகளை கடப்பதில்லை. மாராக நாம் கொடுக்கும் கட்டளைகளை வைத்து தான் அவைகள் சாலைகளை கடக்கின்றன. எங்கள் நாட்டில் ஒலி, ஒளி மற்றும் அதிர்வுகள் மூலமாக சாலைகளை கடக்க எங்களுக்கு வசதிகள் செய்ய பட்டுள்ளன. எனவே அவைகளுக்கு கட்டளைகளை நாங்கள் கொடுத்தால் தான் அவைகள் சாலைகளை கடக்கும். நாய்களுக்கு நிறக்குருடு பிரெச்சனை உள்ளது என்கின்றார்களே அதை பற்றி கொஞ்சம் விளக்கமாக கூருங்களே? ஆம், அது உண்மை தான். நாய்களுக்கு எதை பார்த்தாலும் பச்சை நிரமாக தான் தெரியும். மாராக, அவைகள் மனிதர்களுடைய ரத்த வாசனை உடலமைப்பு போன்றவற்றை வைத்து தான் மனிதர்களை அடயாளம் கண்டு கொள்கின்றன. இத்தகைய கைட் டாக்ஸ் முறை சில நாடுகளில் தோல்வி அடைய நாய்களின் நிற குருடு பிரெச்சனையும் ஒன்று. மேலும் இவற்றிர்க்காகும் செலவு மிகவும் அதிகம் என்பதாலும் இந்த முறை தோல்வியில் முடிந்தது. இருதியாக அவர் ஒரு நிகழ்ச்சியை என்னுடன் பஹிர்ந்து கொண்டார். ஒரு நாள் நான் என்னுடைய சொந்த வேலைக்காக நான் வெளியே சென்றிருந்தேன். அது ஒரு அடுக்கு மாடி கட்டிடம். நான் மாடிப்படி ஏருவதற்காக சென்றேன். ஆனால் நாயோ ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் நின்றுவிட்டது. நான் அதை இழுத்து பார்த்தேன், ஆனால் நாய் நகர்வதாக இல்லை. சில நிமிடங்கள் கழித்து ஒருவர் வந்து சொன்னப்பிறகு தான் எனக்கு அங்கே ஒரு பெரிய பள்ளம் இருப்பது தெரிய வந்தது. எனவே இத்தகைய நாய்களை நாம் வளர்ப்பதில் மிகவும் அதிக அழவில் அக்கறை காட்ட வேண்டும்.

Monday, October 21, 2013

எனக்குப்பிடித்த திறைப்பட பாடல்களும் நான் கற்ப்பனை செய்தவிதங்களும்.

திறைப்பட பாடல்கள் என்றால் அது நமக்கெல்லாம் சற்றே மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு மருந்தாகும். அதிலும் சில இடைக்காலப்பாடல்கள் என்றால்? அது நம்முடைய மனதை ிளகச்செய்து நம்மை மிகவும் சாந்தமான நிலைக்கு அழைத்துச்சென்று விடும். அந்த வரிசயில் நான் ரசித்த சிலப்பாடல்களயும் அத்துடன் அவற்றை கேட்கும்போது எனது மனதிலே எழும் சில உணர்வுப்பூர்வமான கற்ப்பனைகளயும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். ஒருகாலத்திலே பழய பாடல்கள் என்றால் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. ஆனால், நான் முதல் முதலில் பழைய பாடல்களை ரசிக்க துவங்கியது என்னுடைய பள்ளிப்பருவம் முடியும்போது தான். அந்த நேரத்திலே ரேடியோமிர்ச்சி என்ற பண்பலையில் தினமும் இறவு ஒன்பது மணி முதல் இறவு பதினொன்று மணிவரை மிர்ச்சிகோல்ட் என்ற நிகழ்ச்சியை ஒலிபரப்புவார்கள். அதிலே தான் நான் முதல் முதலில் பழையப்பாடல்களை கேட்கத்துவங்கினேன். அதிலிருந்து பழையப்பாடல்கள் என்றால் அது எனக்கு அவ்வழவு பிரியம். பாலைவனச்சோலை என்கின்ற படத்திலே வரும் மேகமே என்றப்பாடல் இன்றும் என் மனதிலே ரீங்காரமிடும் பாடல்களில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த பாடலை கேட்கும்போது தனிமயிலே நடந்து செல்லும் ஒரு மனிதர், மழை வராதா என்று ஏங்கும் ஒரு காலச்சுவடு, அந்த நேரத்திலே மேகங்கள் குளிர்ந்து மழைப்பொழியும் அற்ப்புதமான காட்சிகள், அதை அப்படியே பாட்டாகப்பாடும் ஒரு பெண்மணி போன்ற கற்ப்பனை நிகழ்வுகள் மனதை அசைபோடுகின்றன. இரண்டாவதாக எனக்கு மிகவும் பிடித்த ஒருப்பாடல் ஒரு கொடியில் இரு மலர்கள் என்ற திறைப்படத்தில் வரும் உப்பைத்தின்றவன் தண்ணி குடிப்பான் என்று தொடங்கும் ஒருப்பாடல். சௌந்தரராஜன் அவர்களின் குறல் வளம் இந்த பாடலை மேலும் மெருகூட்டுவதாக உள்ளது. இப்பாடலில் தவறு செய்த ஒரு மனிதன் தான் தண்டனையை எதிர் நோக்கும் நேரத்தில் அனைவருக்கும் புத்தி சொல்லிக்கொடுக்கும் பாடலாக என்னுடைய மனதிர்க்கு தோன்றுகிறது. அந்த பாடல் வரிகளிலே வரும் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு அருமையானவையாகும். இதிலே என்னுடைய மனதை கவர்ந்த வரிகள் என்றால் பாடலின் நடுவே வருகின்ற வசனங்களாகும். அரிசியின் மேலே அவன் அவன் பெயரை ஆண்டவன் எழுதிவைத்தான் அதை அடுத்தவன் யாரும் கெடுப்பதற்கில்லை அவனவன் தின்றே தீர்ப்பான். என்ற வசன வரிகள் வாழ்க்கை என்ற பயணத்தின் உண்மை நிலையை எடுத்து சொல்கின்றன. இதன் முக்கிய பொருள் என்னவென்றால் மனிதன் தன்னுடைய வாழ்க்கையிலே அவனுடைய நிலையை அவன் தான் தீர்மானிக்கின்றான் அதை வேரு ஆட்கள் யாரும் தீர்மானிப்பதில்லை. என்ற பொருளாகவே நான் கருதுகின்றேன். மூன்றாவது பாடலாக என் மனதில் ஒலிக்கும் மற்றொரு பாடல் பச்சைவிளக்கு என்ற திறைப்படத்தில் வரும் தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி என்றப்பாடல். தொலைதூரம் சென்ற தலைவன், அவன் என்று வருவான் என காத்திருக்கும் தலைவி, தலைவனை காணத்துடிக்கும் அவளது கண்கள், தலைவிக்கு உதவ நினைக்கும் தோழி, தலைவனை காணவேண்டுமென ஏங்கும் அவளது இதயம், தனது வருத்தத்தை தோழியிடம் சொல்லும் தலைவியின் மனம் என பலவிதமான கற்ப்பனைகளை அந்த பாடலை கேட்கும்போது எனக்கு தானாகவே வரும். நான்காவதாக என் மனதை கற்ப்பனைக்கு அழைக்கும் பாடல் என்றுச்சொன்னால் அது நந்து என்ற திறைப்படத்திலே வரும் அள்ளித்தந்த பூமி என தொடங்கும் பாடல். இந்த பாடலானது ஒரு கிராமத்தில் னாம் தங்கும் உண்மையான உணர்வினை அழிக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்திற்கு செல்லும் ஒரு மனிதர், கிராமத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையை தனது சக நண்பர்களோடு பஹிரும் நினைவலைகள், தோட்டங்களை சுற்றிக்காட்டும் முதியவர், என்றும் பச்சை மாராமல் நிமிர்ந்து நிற்கும் வயல்வெளிகள், வயக்காட்டு வாசம். போன்ற அருமையான நினைவுகளை மனதிலே கொண்டு வரும் பாடலாக இப்பாடல் திகழ்கின்றது. ஐந்தாவதாக என் மனதிலே ஒலிக்கும் ஒரு பாடல்: சத்திரியன் என்ற திறைபடத்திலே வரும் மாலயில் யாரோ மனதோடு பேச என்று தொடங்கும் பாடலாகும். இந்த பாடலை கேட்கும்போது தனிமயிலே ஒரு மனிதன், அவன் மனதிலே உள்ள ஒரு சோகத்தின் நிலை, கடல்வெளியில் அமர்ந்திருக்கும் காதல் ஜோடிகள், குழந்தைகள் ஓடி ஆடும் மணல்வெளிகள், காதலர்களுக்கு இடயே வரும் பிரிவுகள், மநமுடைந்து பாடும் காதளி என்று பல அருமையான நினைவலைகளை இந்த பாடல் என் கண் முன்னே வருகின்றன. இவ்வாரு பாடல்களை கேட்ட எனக்கு மனதில் தோன்றிய கற்ப்பனைகள் ஏறாளம். ஆயிரம் பாடல்கள் வந்தாலும் கற்ப்பனை உணர்வு மனதை லட்சக்கணக்கான பாடல்களுக்கு இணையாக ஈற்த்துச்செல்கின்றன என்பது தான் ுண்மை.