Monday, January 13, 2014

உலகம் ஒன்றுபட

உலகில் நாம் பல விழாக்களை நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடிக்கொண்டே வருகின்றோம். ஆனால் எல்லாவகையான விழாக்களும் கற்றுத்தரும் பாடம் ஒன்று தான். அது தான் ஒற்றுமை. ஆனால் நாம் கொண்டாடும் விழாக்களின்போது மட்டும் நம்முடைய மகிழ்ச்சியை காட்டுகின்றோம். ஆனால் காலகாலமாக கடைபிடிக்க படவேண்டிய மனித தன்மையை நாம் மறந்து விட்டோம். எந்த நேரத்திலும் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்றநிலையில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம். அதாவது இன்றைக்கு நாம் செய்தி தாழ்களை திரந்தால் எங்கு பார்த்தாலும் கொலை மற்றும் கொள்ளை செய்திகள் தான் படிக்கின்றோம். இந்த நிலை மாறி அனைவரும் ஒன்றுபட்டு வாழும் உலகம் உருவாகவேண்டும். எனவே ஒன்று படுவோம் வாழ்வோம்.

Tuesday, December 31, 2013

புத்தாண்டு வாழ்த்துப்பா

நல்லெண்ணத்தோடு வரவேர்க்கும் புத்தாண்டு. பழயன கழைந்து புதிய எண்ணங்களோடு காத்திருந்து 2014 புத்தாண்டே உன்னை இப்புவிக்கு வரவேற்க்கின்றோம். ஏழைகள் வாழ்வு மலர்ந்திட, துன்புற்றவர்களுடைய வாழ்வு இன்புற்றிட புத்தாண்டே நீ இப்புவிக்கு வருதல் வேண்டும். வளமையற்ற பூமியில் வளமை செழித்திட, மழைக்காக காத்திருக்கும் விவசாயி, விடியலை நோக்கி காத்திருக்கும் நல் மக்கள் போன்றவர்களுக்கு இப்புத்தாண்டே நீ நல்லாண்டாய் மலரவேண்டும். சமதர்மம் வளரவும், அநீதிகள் மரைந்து நீதி செழிக்கவும் புத்தாண்டே நீ உதவ வேண்டும். எல்லோரும் ஒன்று என்ற ஒற்றுமை உணர்வு மக்களிடம் மலர இப்புத்தாண்டு நமக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கயில் இந்த புத்தாண்டை வரவேர்ப்போம். அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Friday, December 13, 2013